|
|
| சிறிலங்கா அரசைத் தோற்கடிக்கும் ஆயுதத்தைக் கையில் எடுங்கள் – இரா.சம்பந்தன் அறைகூவல் |
| [ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 01:14 GMT ] [ மட்டக்களப்புச் செய்தியாளர் ] |
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ்பேசும் மக்கள் முட்டாள்களாகி விடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,
“வரப்போகும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ் மக்கள் தம்முடன் தான் இருக்கிறார்கள் என்று அனைத்துலக சமூகத்துக்குக் காட்டுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது.
செப்ரெம்பர் 8ம் நாள் நடக்கவுள்ள தேர்தலில் கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவரும் சிறிலங்கா அரசாங்கத்தை தமது வாக்குகளால் தோற்கடிக்க வேண்டும்.
கிழக்கில் உள்ள மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முனைகிறது.
வன்முறையற்ற வழியில் தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிறிலங்கா அரசைத் தோற்கடிப்பதற்கு சரியான ஆயுதம் வாக்குகள் தான்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். |
|
|