|
|
| கும்புறுப்பிட்டி காட்டில் 1000 கிலோ இராட்சதக் குண்டு |
| [ வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 00:45 GMT ] [ தா.அருணாசலம் ] |
திருகோணமலை- கும்புறுப்பிட்டி காட்டில் ஆயிரம் கிலோ எடையுள்ள ராட்சத குண்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் குண்டு சிறிலங்கா விமானப்படையின் கிபிர் போர் விமானத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் முகாம் மீது வீசப்பட்டது என்று கூறப்படுகிறது.
கிழக்கில் 2006 ஓகஸ்ட் மாதத்துக்கும் 2007 ஜுன் மாதத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகையின் போதே இந்தக் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்றும் சிறிலங்கா இராணுவத் தலைமையகம் கூறியுள்ளது. |
|
|