தோற்றுப்போனதால் நடுவரைத் தாக்கிய மகிந்தவின் மகன் இடைநிறுத்தம்? ^சிறிலங்காவுக்கு துணை நிற்குமாம் இந்தியா – அசோக் கே காந்தாவின் உறுதிமொழி ^கிழக்கிலும் சிங்களவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கிறது இந்தியா ^யாழ்ப்பாணத்திற்கான பயணம் - ஒரு பயணியின் குறிப்புகள் ^ஐ.நா குழுவின் காதில் பூ வைத்த யாழ்.படைத் தளபதி ^சிறிலங்கா அரசாங்கம் தவறிழைத்து விட்டது – பொது பல சேனா குற்றச்சாட்டு ^சீனா செல்லும் மகிந்தவின் திட்டம் என்ன? - செய்தித்துளிகள் ^ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 01 ^தொலைபேசியில் மிரட்டினாரா குர்ஷித்? - பீரிஸ் விளக்கம் ^யாழ்.குடாநாட்டு படைமுகாம்கள் அனைத்தும் பலாலிக்கு மாற்றப்படுமாம் ^
இன்றைய செய்திகள்
புதன், 22-05-2013
செவ்வாய், 21-05-2013
திங்கள், 20-05-2013
ஞாயிறு, 19-05-2013
சனி, 18-05-2013
வெள்ளி, 17-05-2013
வியாழன், 16-05-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
புலிகளைப் பிளவுபடுத்தவே பிறேமதாச ஆயுதங்களைக் கொடுத்தாராம் – அவரது மகன் ஒப்புதல்
மாத்தயா தலைமையிலான புலிகளை பலப்படுத்துவதன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு எதிராக பிளவை ஏற்படுத்தவே அவர் அவ்வாறு ஆயுதங்களை வழங்கினார்” என்றும் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார். [விரிவு]
லயன் எயர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா, கடத்தப்பட்டதா? – புதிதாக கிளம்பும் சந்தேகம்
விமானத்தைக் கடத்துவதற்கு உக்ரேனிய நாட்டவரான விமானி மடோச்கோ அன்ஸ்ரோலி விடுதலைப் புலிகளுடன் பேரம் பேசியிருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். [விரிவு]
கோத்தாவை கலங்க வைத்த இந்திய ஊடகங்கள்
இதனால் விசனமடைந்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, நேற்று மாலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை சந்தித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் நடத்திய கலந்துரையாடல் குறித்து விளக்கம் கேட்டுள்ளார். [விரிவு]
றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளி பெண் இராஜதந்திரி
தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றும் றொபேட் ஓ பிளேக்கின் இடத்துக்கு, இந்திய வம்சாவளிப் பெண் இராஜதந்திரியின் பெயரை ஒபாமா நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. [விரிவு]
சிறிலங்காவின் 'தென்னாசியாவின் சிங்கப்பூர்' கனவு... நெருக்கடியில்
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்  போரில் தமிழ்ப் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர், சிறிலங்காவானது தென்னாசியாவின் வலுமிக்க பொருளாதார நாடாக வளரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறிலங்காவின் பொருளாதாரமானது நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. [விரிவு]
தெற்காசியாவில் சீனாவின் செயற்பாடுகள் அதிகரிப்பு – தூதுவர்களுடன் சிவ்சங்கர் மேனன் அவசர சந்திப்பு
[ செவ்வாய்க்கிழமை, 10 யூலை 2012, 12:43 GMT ] [ கார்வண்ணன் ]
தெற்காசியாவில் சீனாவின் பொருளாதார மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் வெளிப்படையாக அதிகரித்து வருவதால் குழப்பமடைந்துள்ள இந்தியா, அதனை முறியடிப்பது குறித்துக் கலந்துரையாடுவதற்கு அயல் நாடுகளில் உள்ள தனது தூதுவர்களை புதுடெல்லிக்கு அழைத்துள்ளது.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், பிராந்தியத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் பங்கை அதிகரிப்பது குறித்தும் ஆராய, அயல்நாடுகளில் உள்ள தூதுவர்களை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இன்று சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்பு நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளை முக்கியத்துவப்படுத்தியதாக இடம்பெறவுள்ளது.

அயல்நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு உதவும் வகையில், இந்திய வெளிவிவகார அமைச்சு அபிவிருத்திக்கான கூட்டு முகவரகம் ஒன்றை புதிதாக உருவாக்கியுள்ள சூழலில் இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது.

இது அமெரிக்காவின் யுஎஸ்எய்ட் மற்றும் பிரித்தானியாவின் டிபிட் போன்ற உதவி முகவர் அமைப்புகளை ஒத்ததாகும்.

சீனாவின் பொருளாதாரத் தலையீடுகள் தெற்காசியாவில் அதிகரிப்பது குறித்தும், அயல்நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை ஊக்குவிப்பது குறித்துமே சிவ்சங்கர் மேனன் கலந்துரையாடுகிறார்.

நேபாளத்தில் 36 திட்டங்களுக்கும், சிறிலங்காவில் 12 திட்டங்களுக்கும், பாகிஸ்தானில் 20 திட்டங்களுக்கும், ஆப்கானிஸ்தானில் 7 திட்டங்களுக்கும், பங்களாதேசில் 9 திட்டங்களுக்கும், மாலைதீவில் 8 திட்டங்களுக்கும் சீனா உதவி வருகிறது.

இந்தநிலையில், உரியநேரத்தில் நிறைவு செய்வதை உறுதி செய்வதற்காக இந்தியாவின் எல்லா இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும், மேனன் மீளாய்வு செய்யவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு திட்டங்கள் வேகமாக முன்னெடுக்கப்படாமை இந்தியாவின் இராஜதந்திரத்துக்கு பாதகமாக அமைவதுடன், இதன்விளைவாக தெற்காசியாவுக்குள் சீனா உள்நுழைய முடிந்துள்ளது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

நேபாளத்துக்கான தூதுவர் ஜெயந்த் பிரசாத், பூட்டானுக்கான தூதுவர் பவன் வர்மா, பங்களாதேசுக்கான தூதுவர் பங்கஜ் சரண் ஆகியோரை இன்று சிவ்சங்கர் மேனன் சந்திக்கிறார்.

இதன்போது அபிவிருத்தி மற்றும் பொருளாதார உறவுகளை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து கலந்துரையாடப்படும்.

இந்தக் கலந்துரையாடலில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அபிவிருத்திக்கான கூட்டு முகவரகத்தின் தலைவரான மேலதிக செயலர் பி.எஸ்.ராகவன், மற்றும் இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
தோற்றுப்போனதால் நடுவரைத் தாக்கிய மகிந்தவின் மகன் இடைநிறுத்தம்?
சிறிலங்காவுக்கு துணை நிற்குமாம் இந்தியா – அசோக் கே காந்தாவின் உறுதிமொழி
கிழக்கிலும் சிங்களவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கிறது இந்தியா
யாழ்ப்பாணத்திற்கான பயணம் - ஒரு பயணியின் குறிப்புகள்
ஐ.நா குழுவின் காதில் பூ வைத்த யாழ்.படைத் தளபதி
சிறிலங்கா அரசாங்கம் தவறிழைத்து விட்டது – பொது பல சேனா குற்றச்சாட்டு
சீனா செல்லும் மகிந்தவின் திட்டம் என்ன? - செய்தித்துளிகள்
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 01
தொலைபேசியில் மிரட்டினாரா குர்ஷித்? - பீரிஸ் விளக்கம்
யாழ்.குடாநாட்டு படைமுகாம்கள் அனைத்தும் பலாலிக்கு மாற்றப்படுமாம்