மாகாணசபைகளை ஒழிக்க கட்சிகளை ஒன்றிணையுமாறு அழைக்கிறார் மல்வத்தை பீடாதிபதி ^புலிகளைப் பிளவுபடுத்தவே பிறேமதாச ஆயுதங்களைக் கொடுத்தாராம் – அவரது மகன் ஒப்புதல் ^சிறிலங்கா அதிபரின் சீனப் பயணம் அடுத்த வாரத்துக்கு தள்ளிப்போனது ^சிறிலங்கா இராணுவத் தளபதியின் அப்பட்டமான பொய் ^லயன் எயர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா, கடத்தப்பட்டதா? – புதிதாக கிளம்பும் சந்தேகம் ^மறுக்கப்பட்ட இராஜதந்திர விலக்குரிமை - நோர்வே அதிர்ச்சி ^போராட்டம் நடத்திய மக்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய சிறிலங்கா அமைச்சர் -செய்தித்துளிகள் ^கோத்தாவை கலங்க வைத்த இந்திய ஊடகங்கள் ^றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளி பெண் இராஜதந்திரி ^வவுனியாவில் தடைகளின் மத்தியில் த. தே. கூட்டமைப்பு நடத்திய நினைவேந்தல் நிகழ்வு ^
இன்றைய செய்திகள்
திங்கள், 20-05-2013
ஞாயிறு, 19-05-2013
சனி, 18-05-2013
வெள்ளி, 17-05-2013
வியாழன், 16-05-2013
புதன், 15-05-2013
செவ்வாய், 14-05-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
சிறிலங்காவின் 'தென்னாசியாவின் சிங்கப்பூர்' கனவு... நெருக்கடியில்
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்  போரில் தமிழ்ப் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர், சிறிலங்காவானது தென்னாசியாவின் வலுமிக்க பொருளாதார நாடாக வளரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறிலங்காவின் பொருளாதாரமானது நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. [விரிவு]
சிறிலங்கா வர ஐ.நா சிறப்புப் பிரதிநிதிக்கு அனுமதி மறுப்பு? - செய்தித்துளிகள்
நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான விவகாரங்களுக்கான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி கிறிஸ்ரொவ் ஹெய்ன்ஸ் கொழும்பு வருவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ள போதிலும், சிறிலங்கா அரசாங்கம் இதுவரை அதற்கு அனுமதி வழங்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. [விரிவு]
சீன நீர்மூழ்கிகளை முறியடிக்க அரக்கோணத்தில் அதிநவீன அமெரிக்கப் போர் விமானம்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன நீர்மூழ்கிகளின் ஊடுருவல்கள் அதிகரித்துள்ள நிலையில், நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்முறை ஆற்றலைக் கொண்ட நெடுந்தொலைவுக் கடல்சார் கண்காணிப்பு போர் விமானத்தை அரக்கோணம் கடற்படைத் தளத்தில் இந்தியா நிறுத்தியுள்ளது. [விரிவு]
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு... ஈழம் இன்று! - டி.அருள் எழிலன்
பொதுவாக, வென்றவர்கள் தன்னடக்கத்துடனும் பெருந்தன்மையுடனும் நடந்துகொள்வதுதான் போர் மரபு. ஆனால், உலகின் மௌனமும் இந்தியா கொடுத்த துணிச்சலுமாக, 'இனி, என்னைக் கேட்க யார் இருக்கிறார்கள்?’ என்று தறிகெட்டு ஆடிக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு. [விரிவு]
"எமது காணியின் முன்னால் சிங்களத்தில் எழுதப்பட்ட பெயர்ப் பலகை தொங்குகிறது"
எமது சொந்தக் காணிக்கு செல்வதற்கு நாம் அனுமதிக்கப்படவில்லை. தூரத்தில் நின்று பார்க்கும் போது சிங்களத்தில் எழுதப்பட்ட பெயர்ப் பலகை ஒன்று எமது காணியின் முன்னால் தொங்கவிடப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. [விரிவு]
அவுஸ்ரேலிய கடற்பரப்பில் மீட்புப் பணிகள் தொடர்கிறது - 3 சடலங்கள் மட்டும் மீட்பு
[ வெள்ளிக்கிழமை, 22 யூன் 2012, 01:35 GMT ] [ கார்வண்ணன் ]
கிறிஸ்மஸ் தீவுக்கு அப்பால் கடலில் மூழ்கிய அகதிகள் படகில் இருந்தவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

உயிர் தப்பியோரை மீட்க இன்னமும் வாய்ப்புகள் உள்ளதாக அவுஸ்ரேலிய அதிகாரிகள் இன்றுகாலை கூறியுள்ளனர்.

இதுவரை 13 வயதுச் சிறுவன் உள்ளிட்ட 110 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கிறிஸ்மஸ் தீவில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள கடல் பகுதியில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக இன்றுகாலை தகவல் வெளியிட்ட அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் ஜாசன் கிளேர்,

“விபத்து நடந்த கடல்நீரின் வெப்பநிலை 29 டிகிரியாக உள்ளது.

கடலில் அலைகள் தீவிரமாக இல்லை. அரை மீற்றர் தொடக்கம் 1.25 மீற்றர் வரையே அலைகள் எழுகின்றன.

உயிர்காப்பு அங்கியுடன் அல்லது ஏதேனும் மிதக்கும் பொருளின் உதவியுடன் 36 மணிநேரம் வரையில் இந்த சூழ்நிலையில் உயிர்வாழ முடியும்.
எனவே, மேலும் பலரைக் காப்பாற்றுவதற்கு சாத்தியங்கள் உள்ளன.

மேலும் பல உயிர்களைக் காப்பாற்ற நாம் முயற்சிக்கிறோம்.

மூழ்கிய படகின் மீது இருந்த 40 பேர் மீட்கப்பட்டனர்.

ஏனையவர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டு படகு மூழ்கிய இடத்தில் இருந்து 3 கடல்மைல் தொலைவில் மீட்கப்பட்டுள்ளனர்.

மீடபுப்பணிகளுக்கு இந்தோனேசியாவும் உதவுகிறது.

இந்தத் தேடுதல் அவுஸ்ரேலியக் கடற்படைக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் 4 வணிகக் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அவுஸ்ரேலியக் கடற்படைக் கப்பல் மீட்ட 110 பேரில் பலர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் கிறிஸ்மஸ்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்துக் குறித்து அறிந்ததும் அவுஸ்ரேலிய விமானப்படை விமானம் ஒன்று நேற்றுமாலை 5 மணியளவில் சம்பவ இடத்துக்குச் சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு உயிர்காப்பு அங்கிகளை வீசியது.

குறுகிய நேரத்தில் 4 வணிக கப்பல்களும், 2 கடற்படைக் கப்பல்களும் அந்த இடத்தை அடைந்தன.

நேற்றிரவு மேலதிக விமானங்கள் உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மிகவும் விசாலமான கடற்பரப்பில் தேடுதல்களை நடத்த வேண்டியுள்ளது.

கிழக்குத் திமோருக்கு அப்பால் இன்னொரு படகு மூழ்கியதாக வெளியான தகவல் தவறானது.

அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல்களில் இது உறுதியாகியுள்ளது. அங்கு தேடுதல்கள் நிறுத்தப்பட்டு விட்டன.“ என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த விபத்தில் 90 பேர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காணாமற் போயிருக்கலாம் என்று அவுஸ்ரேலிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, கவிழ்ந்த படகு இன்னமும் மிதந்து கொண்டிருப்பதை காணமுடிவதாக தேடுதலில் ஈடுபட்டுள்ள விமானங்களின் விமானிகள் இன்று காலை தகவல் அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையே, கடலில் மூழ்கிய அகதிகள் படகு தொடர்பாக கன்பரா மற்றும் ஜகார்த்தாவில் உள்ள சிறிலங்கா தூதரகங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

பிந்திய செய்தி

கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே நேற்று மூழ்கிய அகதிகள் படகு சிறிலங்காவில் இருந்த புறப்படவில்லை என்று சற்று முன்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிருடன் மீட்கப்பட்டவர்கள் கிறிஸ்மஸ்தீவுக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து இந்தப் படகு இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டது தெரியவந்துள்ளது.

முன்னதாக இந்தப் படகு சிறிலங்காவில் இருந்து புறப்பட்டிருக்கலாம் என்று அவுஸ்ரேலிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்தனர்.

அத்துடன் இந்தப் படகில் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் பயணம்  செய்ததாகவும் தகவல் இல்லை.

ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான் நாட்டவர்களே இதில் பயணம் செய்துள்ளனர் என்றும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
மாகாணசபைகளை ஒழிக்க கட்சிகளை ஒன்றிணையுமாறு அழைக்கிறார் மல்வத்தை பீடாதிபதி
புலிகளைப் பிளவுபடுத்தவே பிறேமதாச ஆயுதங்களைக் கொடுத்தாராம் – அவரது மகன் ஒப்புதல்
சிறிலங்கா அதிபரின் சீனப் பயணம் அடுத்த வாரத்துக்கு தள்ளிப்போனது
சிறிலங்கா இராணுவத் தளபதியின் அப்பட்டமான பொய்
லயன் எயர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா, கடத்தப்பட்டதா? – புதிதாக கிளம்பும் சந்தேகம்
மறுக்கப்பட்ட இராஜதந்திர விலக்குரிமை - நோர்வே அதிர்ச்சி
போராட்டம் நடத்திய மக்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய சிறிலங்கா அமைச்சர் -செய்தித்துளிகள்
வடக்கில் தேர்தலை நடத்துவது படையினரை அவமானப்படுத்தும் செயல் - சம்பிக்க ரணவக்க சீற்றம்
கோத்தாவை கலங்க வைத்த இந்திய ஊடகங்கள்
றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளி பெண் இராஜதந்திரி